அன்பு பதிவுலக வாசகர்களே மற்றும் பதிவர்களே ....
நேற்று திருப்பூர் சேர்தளம் அறிவித்திருந்த வலைபதிவர் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற நானும் சென்றிருந்தேன். அங்கு நிறைய வலைப்பதிவர்களை காண முடிந்தது.
சாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும், முரளிகுமார் பத்மநாபனும், தல வெயிலானும், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகியும், ராமன் மற்றும் கடலையூர் செல்வமும்(யாரையாவது விட்டிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க) எங்களை ஒரு குழந்தையைப் (எனக்கே இது கொஞ்சம் ஓவரா படுதுதான்) போல பாவிச்சு ஒவ்வொண்ணா சொல்லிகொடுதாங்க.
அதுவும் பரிசல்கார அண்ணாச்சி மணல்ல ஆவன்னா போடற மாதிரி கையை புடிச்சு சொல்லி கொடுக்காத குறைதான்.
அப்பவே வெண் புரவி என்கிற பெயரில் ஒரு புது வீடு (ப்ளாக்) கட்டி புது மனை புகு விழாவும் அமர்க்களமா நடந்துச்சு.
நானும் வெண் புரவியில் அட்டகாசமாய் ஏறி அபூர்வ ராகங்கள் ரஜினி (அப்ப பரிசல்காரன் கே.பாலச்சந்தர்-ஆ) மாதிரி கேட்-ஐ உடைச்சிட்டு ஒரு என்ட்ரி கொடுத்திருக்கேன்.
இதை நல்லவிதமா உபயோகிச்சுக்கிட்டு உங்களை கெட்டவிதமா இம்சை பண்ணப் போறேன்.
எல்லாரும் காத்திருங்க.....
பி.கு.: (என்ன அண்ணாச்சிகளா இப்ப நீங்க வச்ச டெஸ்ட்-ல நான் பாஸா, பெயிலா. கொஞ்சம் மானாட மயிலாட ரம்பா மாதிரி மார்க் போட்டு சொல்லுங்க).
அன்புடன்
வெண் புரவி அருணா
PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE
Monday, August 30, 2010
பூஜை இல்லாமல் ஒரு புது (வலை)மனை புகு விழா
Sunday, August 29, 2010
தொடக்கம்
வலைப்பதிவு என்னும் அடர்ந்த கானகத்துக்குள் வேட்டையாட வெண்புரவியில் ஏற்றி அனுப்பி வைக்கும் சேர்தளத்துக்கு நன்றி!
Subscribe to:
Posts
(
Atom
)